தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக 43 வீடுகள் சேதம் அடைந்ததை பார்வையிட்ட பஞ்சாயத்து தலைவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினார்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக 43 வீடுகள் சேதம் அடைந்ததை பார்வையிட்ட பஞ்சாயத்து தலைவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினார்


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் வெப்பநிலை 102.2 டிகிரியை எட்டியது. இந் நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள  வேடகட்டமடுவு, தரகம்பட்டி ஆகிய கிராமத்தில் நேற்று  இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது.  இதனால் அப்பகுதியில் உள்ள குடிசை வீடுகள் ஓட்டு வீடுகள் என 43 வீடுகள் சேதமடைந்தன. அப்பகுதியில் அதிகபடியான மக்கள் வசதியின்மையால் அதிகமாக குடிசை வீடுகளில் வசிக்கின்றனர். சூறைக் காற்று வேகமாக வீசியதில்  குடிசை வீடுகள் ஓட்டு வீடுகள் பலத்த சேதமடைந்தன. 


தகவலறிந்த வேடகட்டமடுவு பஞ்சாயத்து தலைவர் ராணி முத்து, திமுக ஒன்றிய செயலாளர் சண்முக நதி உள்ளிட்ட திமுகவினர் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு வீட்டு உரிமையாளர்களுக்கு  அரிசி, எண்ணெய், பருப்பு, உப்பு, மிளகாய், நோஸ் மாஸ்க் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.


Popular posts
மருங்கூர் VM கேஷ்யூஸ் நிறுவனர் தொழிலதிபர் திரு வீரவிஸ்வாமித்தின் அவர்கள் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்து இரு மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்
Image
கூடலூர் நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வுக்காக காய்கறிகள் பழங்களை கொண்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்
Image
வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை - டிரம்ப் அதிரடி
Image
கொரோனா வைரஸ் காரணமாக உணவு கிடைக்கவில்லை; ஒரு வாழைப்பழத்துக்காக மோதிக்கொண்ட நூற்றுக்கணக்கான குரங்குகள்
Image